Sunday 7 August 2011

பெண்ணியம்...! பெண் அடிமை வாழ்க..!



                 பெண்கள் அடிமை படுத்தப்படுகிறார்கள், பெண்களுக்கு திருமணதிற்கு முன்னும் பின்னும்  சம உரிமை இல்லை, பெண்கள் சினிமாவிலும், விளம்பரத்திலும் கவர்சிக்காகவே படுத்தப்படுகிறார்கள்  என்று நிறைய பெண்களும் குறிப்பாக சில ஆண்களும், ஆண் சமுகத்தை எளிதாக பழிக்கிறார்கள், பெண் சம உரிமைக்காக போராடுகிறோம் என்றும்   சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். அப்படி என்னதான் போராடுகிறார்கள் இவர்கள்?


               கல்யாணத்திற்கு பெண்  வீட்டில்  இருந்து மாப்பிளை பார்க்கும் போது எப்படி பார்க்கிறார்கள்?    நல்ல மாப்பிளையா, நல்லா உடல் அமைப்பா?  நல்லா படித்து இருகிறான? என்று பார்த்தல் சரி.. ஆனா, அவங்க எப்படி தேடுறாங்க, மாப்பிளை பெண்ணை விட உடல் ரீதியில் பெரியவனா? பெண்ணை விட உயரம் அதிகமா, நிறைய சம்பளத்திற்கு வேலை செய்கிறானா ஆனால் பெண் வேலை பார்க்காமலும் இருப்பாள், அப்படியே பெண் வேலை செய்தாலும் அவளை விட அதிகம் சம்பளம் வாங்குகிற ஆண் மகனைத் தேடுகிறார்கள். இப்படி உடல் ரீதியிலும், பணத்திலும் பெண்ணை விட ஆண் உயர்ந்திருக்க வேண்டும் ஆனால் மிக கண்டிப்பாக பெண்ணுக்கு சம உரிமை வேண்டும். எப்படி இது முடியும், ஆண் மகன் எல்லா வழிகளிலும் பெண்ணை விட உயர்ந்திருக்கும் போது இது எப்படி நடக்கும். 

           படிக்கிற பொண்ணுங்ககிட்ட கேட்டு பாருங்க, உங்களுக்கு வர போற கணவன் எப்படி இருக்கணும்னு? அவங்க என்ன சொல்லுவாங்க, என்னோட அதிகமா படிச்சிருக்கணும் இல்லைனாலும் என்னோட அளவுக்காவது படிச்சிருக்கணும், நான் 10000 ரூபாய் சம்பளம் வாங்கினா மாப்ளை 10000 க்கு மேல வாங்கணும், என்னை விட உயரமாக இருக்க வேண்டும், குறைந்தது என்னோட உயரமாவது இருக்கனும், ஏன் என்று கேட்டால், ஆண் மகன் பெண்ணை விட உடல் ரீதியில் சக்தி வாய்ந்தவர்கள். இது தான் இயற்கை என்கிறார்கள். இயற்கையை ஒத்துக்கொள்கிறார்கள் ஆனால் பெண் என்பவள் ஆணுக்கு சமமானவர்கள் என்று பேசுகிறார்கள்.

               இந்த மாதிரி பெண்களும், பெண் வீட்டாரும் இருந்தால் ஆணதிக்கம் ஒழியாது. யார் எப்படி மேடை போட்டு பேசினாலும், எத்தனை சட்டங்கள் வந்தாலும் இது இப்படி தான் இருக்கும்...  இனிமேலாது படிக்கிற பெண்கள் தன்னை விட குறைவாக படித்த ஆணையோ அல்லது  படிக்காத ஆணையோ கல்யாணம் பண்ண வேண்டும். தன்னை விட குறைவான சம்பளம் வாங்கும் ஆணையோ அல்லது வேலை இல்லாத ஆணையோ திருமணம் செய்ய முன் வாருங்கள். உடல் ரீதியில் சுமாராக உள்ள ஆணை திருமணம் செய்யுங்கள். வேலைக்குப் போகும் பெண்கள் வேலை இல்லா ஆண்களை திருமணம் செய்து கொண்டால், வரதட்சனைக் கொடுமை பெண்களுக்கு வருமா?  இந்த விஷயத்தில் ஆண்கள் எவ்வளவு கெட்டிக்காரர்களாக இருக்கிறார்கள் பாருங்கள். உயரத்திலோ, சம்பளம் வாங்குவதிலோ அல்லது வேளைக்கு போகாத பெண்ணையோ இப்படி  தன்னை விட குறைவாக இருந்தால் போதும் என்று நினைக்கிறார்கள்.  பெரியதாக  ஆசை பட்டு ஆண் உரிமைக்காக யாரும் போராடவில்லை.

               இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் எந்த பெண்ணோ அல்லது பெண் வீட்டாரோ வேளைக்கு போகாத ஆண் மகனையாவது  திருமணம் செய்ய முன் வருகிறார்களா? அல்லது செய்து வைக்க உடன் படுகிறார்களா?  ஆண்கள் வேளைக்கு போனால்தான் பெண் கொடுக்கிறார்கள். ஆனால் பெண்களுக்கு அப்படி இல்லை. அப்படியானால் பெண்களுக்கு  எதுக்கு 50 % இட ஒதுக்கீடு வேலை வாய்ப்பிலும் மற்றும்  எல்லா துறைகளிலும்  வேண்டும்.  சும்மா எதாவது பேச வேண்டுமென்று பேசுவது வாடிக்கையாகிவிட்டது.

             பெண்கள் சினிமாவில் வெறும் கவர்சிக்க்காகவே பயன்படுதப்படுகிரர்கள் என்று நிறைய மக்கள் சொல்லுகிறார்கள். ஆனால் அது அப்படி மட்டும் இல்லை. பெண்கள் கவர்சிக்க்காகவும்  பயன்படுதப்படுகிரர்கள். சினிமாவில் பெண்களை  அரை குறை ஆடையோடு நடிக்க வைக்கிறார்கள் என்கிறாகள். அப்படி மட்டும் இல்லை. பெண்களை வித விதமான ஆடைகளால்  ஆண்கள் அழகுபடுதுகிரர்கள். பெண்கள் உடலை முழுவதும் மறைத்து ஆடை அணியும் போது உள்ள அழகையும், மிக குறைவான ஆடை அணியும் போது கவர்சிகரமான அழகையும் சொல்லியிருகிறார்கள். சேலையை பற்றி பெருமையாக பேசியதும் சினிமாவில் தான். யோசித்துப் பார்த்தால் தெரியும் ஆண்களை விட பெண்களுக்கு தான் நிறைய வகைகளில் ஆடைகள் உண்டு. பெண்ணை எப்படி எல்லாம் கவர்ச்சியாக பார்க்க முடியுமோ அப்படி எல்லாம் ரசிக்கிறார்கள். வெறும் கவர்ச்சியாக மட்டுமா பார்கிறார்கள், பெண்களை தேவதைகளாக பார்க்கிறார்கள், பிசாசுகளாக பார்க்கிறார்கள், ஒரு பெண்ணால் ஆண் முன்னேறவும் முடியும், நாசமாகவும் போக முடியும் என்று உணர்கிறார்கள். அம்மாவை போற்றத சினிமா உண்டா? அம்மாவை எப்படி எப்படி எல்லாம் போற்ற முடியுமோ அப்படி எல்லாம் போற்றி இருக்கிறார்கள். எத்தனை சினிமாவில் அப்பாவை பற்றி  போற்றி இருக்கிறார்கள்? குடிகார அப்பா, வைப்பட்ட்டி வைத்திருக்கும் அப்பா என்று நிறைய சினிமாவில் சொன்னதுண்டு. அக்கா, தங்கை, தோழி உறவு முறை பற்றி நிறைய சினிமாவில் போற்றி இருக்கிறார்கள்.  அது போலத்தான் விபச்சாரியாகவும் பெண்ணை சினிமாவில் காட்டுகிறார்கள். இப்படி எல்லா வழிகளிலும் பெண்ணை ரசிப்பவன், உணருகிறவன் ஆண் மகன். இவை எல்லாவற்றிலும் பாலியல் சிறிது மேலோங்கியிருகிறதே தவிர பெண்ணை கவர்சிக்காக மட்டும் பயன்படுத்தவில்லை. ஹிந்தி சினிமாவில் கதா நாயகர்கள் தன் உடம்பை காட்டாத சினிமாக்கள் மிகவும் குறைவு. மேலும் பெரும்பாலான  ஆங்கில திரைப்படங்களில் கதா நாயகனின் உடல் பெரும்பாலும் பலத்தையும், கவர்ச்சியையும் காட்டுவதாய் இருக்கும். இதை ஆண்கள் பெருமையாக நினைக்கிறார்கள்.

                         ஒரு ஆண்  இயக்குனர் ஆணை மையமாக வைத்து சினிமா  எடுக்கிறான். அவன் அதைத்தான் முழுமையாக செய்ய முடியும். ஒரு ஆண் பெண்ணின் உணர்வுகளை முழுமையாக சொல்ல முடியாது. அதனால் பெண்ணின் முழு உணர்வுகளும் சரி வர காட்டப்படுவதில்லை.  இதை சரி செய்ய பெண்களும்  சினிமாவை இயக்க வேண்டும். பெண்ணின் உணர்வுகள், பெண்ணால் முடிந்தவை, முடியாதவை, நீங்கள் ஆணை அணுகும் முறை, ஆண்களை ரசிக்கும் விதம் மற்றும்  வெறுக்கும் முறை  எல்லாவற்றையும் சினிமா மூலமாக சொல்ல வேண்டும். இதை தவிர பெண்களும், சில ஆண்களும் எப்படி எல்லாம் போராட்டம் நடத்தினாலும் அது பயனற்றவையாகவே தொடரும்.

                      
                        விளம்பரத்தில் பெண்கள் ஆபாசமாக கட்டப்படுகிறார்கள்  என்றும்  பலர் குறை கூறுகிறார்கள்.  இது  விளம்பர யுக்திகளில் இதுவும் ஒன்று. தயாரிக்கப்படும் பொருட்கள் யாரை நினைத்து தயாரிக்கப்படுகிறதோ அதற்கேற்றவாறு தான் விளம்பரமும் பண்ண முடியும். வேண்டுமென்றால் அதை தவிர்த்து பெண்கள் வியாபாரம் செய்து தாருங்கள் அதை நாங்கள் பின்பற்றுகிறோம். 


                  ஆண்கள் செய்வது எல்லாவற்றையும் பெண்கள் செய்ய முடியும் என்று சொல்லாதிர்கள். பெண்களுக்கும் ஆண்களுக்கும் சில தனித்தன்மை உண்டுன்பதை ஏற்றுக்கொள்ளுங்கள். கடைசியாக ஒரு வேண்டுகோள் பெண்கள் தங்களுடய உணர்வுகளை வெறும் வார்த்தைகளால் மட்டும் சொல்லாமல் செய்து காட்டுங்கள். நீங்கள் காலடித்தடத்தை வைத்துவிட்டு செல்லுங்கள் ஆண்கள் அதை பின்பற்ற முயற்சிப்பார்கள். 

           ஒழியட்டும் பெண்ணடிமை... ஒழியட்டும் ஆணைப்பற்றிய  வேண்டாத பிரச்சாரங்கள்...   வளரட்டும் பெண்ணியம்..   வாழ்க பெண்ணியம்...! 

                                   
 




இந்தியாவில் இல்லையா மருத்துவம்?

                  


                          திருமதி. சோனியாகாந்தி அவர்கள் புற்று நோய் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்று உள்ளார் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஏன் நம் நாட்டில் புற்று நோய் சிகிச்சைக்கு மருத்துவம் சரியில்லையா?  ஏன் வெளி நாடு செல்ல வேண்டும்? நம் நாட்டில் புற்று நோய்க்கான மருத்துவம் சரி இல்லை என்றால் அதை மேம்படுத்த வேண்டியதுதானே.. நம் நாட்டில் உள்ள பெரிய பணக்காரர்கள், தொழில் அதிபர்கள் வெளி நாட்டிற்கு மருத்துவம் பார்க்க செல்லலாம். இங்கு மருத்துவ வசதி சரி இல்லை என்று கூறலாம். அவர்களால் இங்கு உள்ள மருத்துவத்தை மேம்படுத்துவது கடினம். ஆனால், நாட்டை ஆளும் திருமதி. சோனியாகாந்தி  அவர்களால் மருத்துவத்தை மேம்படுத்த முடியாதா? அப்படியானால், நாட்டிற்கு  எதற்கு  சுகாதரத் துறை அமைச்சர், இணை அமைச்சர், 28 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன் பிரதேசங்களில் சுகாதரத் துறை அமைச்சர்கள்? 120 கோடி மக்கள் இவரை நம்பி நாட்டை கொடுத்தால், இவர் இங்கு  மருத்துவத்தை மேம்படுத்தாமல் இருக்கிறார்...

                     இங்கே அவருக்கு மருத்துவம் செய்வதற்கு போதுமான வசதிகள் இருகின்றன அனால், அவர் அமெரிக்காவை சுற்றி பார்த்துவிட்டு அங்குள்ள சுற்றுச்சூழலில் மருத்துவம் மேற்கொண்டு அங்கே சிறிது காலம் ஓய்வு எடுப்பதாக கூறினால்... அதை ஏற்றுகொள்ள யோசிக்கலாம்.  ஒரு வகையில் ஏற்றுக்கொள்ளலாம்.. இருந்தாலும் பெரும்பான்மையான மக்கள் தலைவரையே பின்பற்ற நினைப்பதால் இவர்  இந்தியாவில் மருத்துவம் பார்ப்பது நல்லது. இது அம்மக்களுக்கு முன்னோடியாகவும்  இருக்கும். நம் நாட்டைப்பற்றிய நன் மதிப்பையும் காட்டும்.