Tuesday 8 November 2011

சீனி என்றால் இந்து மதம்... sweeten என்றால் கிறிஸ்துவ மதம்...?




                 நவம்பர் 9, 2002  அன்று என்னை தண்ணீரில்  மூழ்கச் செய்து நீ மறு பிறவி எடுத்தாய் என்று சொன்னார்கள். அதற்கு பெயர் ஞானஸ்தானம்.  இன்று முதல் உன்னுடைய பெயர்  ஜோன்ஸ் என்று மாற்றப்பட்டுள்ளது என்று சொன்னார் எனது போதகர். ஏன் என்றால் சீனி என்றால் இந்து பெயராம். ஆதலால்  கிறிஸ்துவுக்குள் பிறந்ததன் அடையாளமாய் ஜோன்ஸ் என்று மாற்றப்பட்டுள்ளது என்று சொன்னார் அவர். அறியாத பருவத்தில் தெரியாமல், கிறிஸ்துவ மதத்தில் வாழ்ந்த களம் அது.
 
                  எல்லாம் வேடிக்கை. பிறப்பில் நான் ஒரு இந்து மதத்தைச் சார்ந்தவன். எனக்கு  பத்து வயது இருக்கும் போது கிறிஸ்துவ நட்பு வட்டரங்கள் கிடைத்தது. அவர்கள் என்னை கொஞ்சம் கொஞ்சமாக கிறிஸ்துவ மதத்திற்குள் இழுத்து எனக்கு கிறிஸ்துவ மதத்திற்குரிய அடையாளத்தை கொடுத்து விட்டார்கள். அதன் விளைவு தான். ஞானஸ்தானம், பெயர் மாற்றம் ஜோன்ஸ்.

          என்னை நிறைய கதைகளை சொல்லி மாற்றி விட்டார்கள்.  அப்போது எனக்கு விவரம் தெரியவில்லை. தெரிதிருந்தால் கேட்டுருப்பேன் என் போதகரிடம், ஏன் கிறிஸ்தவர்களின் மத்தியில் எனக்கு பெயர் மாற்றம், இன்னொரு பெயர் எதற்கு என்று?  எனக்கு ஞானஸ்தானம் கொடுத்து பெயர் வைத்த போதகரின் மகனின் பெயர் sweeten.  சீனி என்ற பெயரும் sweeten  என்ற பெயரும் ஒரே அர்த்தத்தைத்தான் தருகின்றது. ஆனால் சீனி என்றால் இந்து மதத்தின் பெயர், sweeten என்றால் கிறித்துவ மதத்தின்  பெயராம். நான் இதை அந்த போதகரிடம் கேட்டால் அவர் என்ன சொல்லியிருப்பார்...?

        கிறித்துவ மதம் என்றால் என்ன..? சற்று ஆழ்ந்து யோசித்தால் தெரியும். இயேசுவின் சீடர் தாமஸ் தொடங்கி  வெள்ளைக்காரன் நம்மிடம் பரப்பிச் சென்ற அவனுடைய மதம் கிறித்துவ மதம். அவனுடைய கலாச்சாரம் கிறித்துவ மதம். அவர்களுடைய வாழ்க்கைமுறை கிறித்துவ மதத்தை பின்பற்றியது. அதனால் அவன் அடிமை படுத்திய மக்களிடம் கிறித்துவ மதத்தை பரப்பினான்.  ஆதிக்கவர்கத்தின் கலாச்சார திணிப்பு கிறித்துவ மதம். வெள்ளைக்காரன் நம்மை ஆண்டவன். அவனுடைய கலாச்சாரத்திற்கு ஏற்ற பெயர்களை வைத்தால், அதை உயர்வாக நினைக்கிறோம். நம்முடைய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் பெயரான தமிழ் பெயரை வைத்தால், அதை குறைவாக நினைக்கிறோம். அவனுடைய மேற்கத்திய  கலாச்சாரமான ஆடை அணியும்  முறை, உணவு பழக்கங்கள், மொழி, போன்றவற்றை  நாம் உயர்வாக எண்ணுகிறோம். நம்முடைய கலாச்சார பழக்க வழக்கங்களை நாம் தாழ்வாக நினைக்கிறோம்.

               வெள்ளைக்காரன் நம்மை விட்டு போன பின்னும் நம்மை பல விதங்களில் அடிமைபடுதிக்கொண்டே இருக்கிறான். இதை நாம் தெரிந்தும், தெரியாமலும் பெருமையாகவே நினைதுக்கொண்டிருக்கிறோம். மேற்கத்திய கலாச்சாரத்தில் சிறப்பானவைகளும் உண்டு. ஆனால் நம்முடைய கலாச்சாரத்தை குறைவாக எண்ணுவது நமக்கு இழிவு. இந்த வகையில் எனக்கும் பெயர் சூட்டிவிட்டார்கள்.   


           கிறிஸ்து யார்?  என்று யோசிக்கும் போது, உலகத்தில் மனிதனாய் பிறந்த சிலர் தன்னை கடவுள் என்று கூறிகொள்ளும் நபர்களுள் அவரும் ஒருவராக இருக்கலாம். தமிழ் நாட்டில் உள்ள சில பிரபலமான சாமியார்களை எடுத்துக்கொள்ளலாம். அவர்கள் தன்னை கடவுளின் மறு பிறப்பு என்றும் அம்மனின் மறு பிறப்பு என்றும் சொல்கிறார்கள். இவர்களை பின்பற்ற லச்சக்கணக்கான கூட்டம்.  500  வருடங்கள்  கழித்து இந்த லட்சகணக்கான கூட்டம் பெருகி அந்த பிரபல சாமியார்களை கடவுள் என்று அசைக்க முடியாத தனித் திரளாக மாறிவிடும் சூழல் ஏற்பட வாய்ப்பு உண்டு. அவர்களை கடவுளாக ஏற்றுக்கொண்டதற்கு, அவர்கள் சொல்லும் சான்றுகள் என்னவாக இருக்குமென்றால், இவர் மக்களுகாக எராளமான நன்மைகளை செய்திருக்கிறார். பல அற்புதங்களை நிகழ்த்தியிருக்கிறார். மக்கள் பயன் பெரும் நோக்கில் எராளமான கல்வி நிறுவனங்களை  நிறுவி இருக்கிறார், மக்களுக்கு வேலை கொடுக்கும் வகையில் பல தொழில்களை செய்துள்ளார், பல தொழில் நிறுவனங்களை நிறுவியுள்ளார் என்றெல்லாம் சொல்லுவர்கள். அப்போது உள்ள அரசியல் படி அந்த லட்சகணக்கான மக்களின் ஆதரவு வேண்டுமென்று  அவர்தான் கடவுள் என்று அரசியல்வாதிகளும்  பறைசாற்ற ஆரம்பித்து விடுவாரகள்.

                இங்கு புதிதாக ஒரு மதம் உருவாகி விட்டது. புதிதாக ஒரு கடவுள் உருவாகி விட்டார். இந்த மக்கள் பிற சமூகத்தினரை அடிமைபடுத்தும் சூழ்நிலை ஏற்பட்டால் அவரகளுடைய மதம் பெரிதாக தோன்றும். இப்படி வந்தவராக கூட இருக்கலாம் கிறிஸ்து.  இதில் மாட்டிகொண்டு சில வருடங்கள் கிறித்துவ முத்திரையுடன் அலைந்தவர்களில் நானும் ஒருவன். இதேபோல் ஆரியர்கள் மூலம் பரவிய  இந்து மதத்தினால் நான் ஒரு இந்துவாகவும் வாழ்ந்துவிட்டேன். வெள்ளைக்காரர்கள் மூலம் பரவிய கிறித்துவ மதத்தினால் நான் ஒரு கிறிஸ்துவாகவும் வாழ்ந்துவிட்டேன். மதம் என்னை அடையாளப்படுத்தும் சாயமகவே தெரிகிறது. 



                                      நவம்பர் 9, 2002 
              






  















Thursday 29 September 2011

சாமானியன் முதல் பிரதமர் வரை - தகவல் அறியும் உரிமை சட்டம் (RTI)





                 நாட்டில் இப்பொது  எழும்  பல பிரச்சனைகள் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தான் வெளி வருகிறது.  குறிப்பாக ஊழல் புகார்கள் எல்லாம் இச்சட்டத்தின் மூலம் பெறப்பட்டவைதான். இப்பொது கடைசியாக  வெளி வந்த பிரச்சனை நிதி அமைச்சரவையிலிருந்து பிரதமர் அலுவலகத்திற்கு  அனுப்பப்பட கடிதம். இதில் உள் துறை அமைச்சர் ப.சிதம்பரம்  இதற்கு முன் நிதி அமைச்சராக இருந்த போது 2 ஜி ஊழலை தடுத்திருக்க முடியும் என்பது தான். இப்படி அரசின் எல்லா செயல்பாடுகளையும் உடனுக்குடன் யார் வேண்டுமானாலும் தெரிந்து கொள்ளலாம். இதன் மூலம் அரசு நம்மைப் பார்த்து பயந்து நேர்மையாக நடந்து கொள்ள முயற்சி செய்யும். இந்த பிரச்சனை நம்முடைய பிரச்சனையாக இருந்தாலும் இது சாமானிய மக்களுக்கு தொலைவில் உள்ள பிரச்சனை என்று சொல்லலாம். இந்த பிரச்சனையை அரசியல்வாதிகளும் அதனுடைய நெருங்கிய வட்டாரங்களும் வேண்டுமானால் உடனடியாக தெரிந்து கொள்ளலாம். அவர்கள் மூலம் சாமானிய மக்கள் தெரிந்து கொள்ளலாம். இதை அவர்கள் பார்த்துக் கொள்ளட்டும்.

             நாம் நம்மைச் சுற்றி நடக்கிற செயல்கள் அதாவது நமக்கு நடக்கிற செயல்கள் குறித்து தெரிந்து கொள்ள முற்ப்படலாம். நாம் படிக்கும் பள்ளிகள், கல்லூரிகள், பணிபுரியும் அரசு நிறுவனங்கள்  மற்றும் நாம் நேரடித் தொடர்பு வைத்துள்ள நிறுவனகள் ஆகியவற்றை இச்சட்டத்தின் மூலம் கேள்வி கேட்க முன் வரலாம். உதாரனமாக தெருவில் சாலை வசதி, தெரு விளக்கு வசதி, குடி நீர் வசதி போன்ற குறைபாடுகள் இருந்தால் சமந்தப்பட்ட அதிகாரிகளிடம் வளைந்து குனிந்து முறையிடுவதர்குப் பதிலாக இச்சட்டத்தைப் பயன்படுத்தி நாம் அவர்களிடம்  தைரியமாக  கேள்வி கேட்டு வசதிகளை செய்து தர வைக்கலாம். அப்படி இல்லை என்றால் பெறப்பட்ட அதிகாரப் பூர்வமான தகவல்களை வைத்துக் கொண்டு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கலாம். இவவாறு செய்யும் போது அவர்கள் நம்மைப் பார்த்து பயந்து நம்முடைய குறைகளை சரி செய்ய முன் வருவார்கள். இதற்காக நிறைய பணம் செலவிடத் தேவையில்லை. நேரத்தை அதிகம் செலவிடத் தேவையில்லை. நாம் செய்ய வேண்டிய ஒரே ஒரு செயல் என்னவென்றால், நாம் குறைந்த பட்சமாக நம்முடைய பிரச்சனைகளையாவது தெரிந்து கொண்டு அதை சரி செய்ய முன் வரவேண்டும்.
    
               இதை நன் ஏன் சொல்கிறேன் என்றால் என்னுடைய நெருங்கிய  நண்பர்கள்  கல்லூரியில் செய் முறைத் தேர்வில் முன் விரோதம் காரணமாக  குறைந்த மதிப்பெண் பெற்று   பழிவாங்கப்பட்டார்கள். நம்மை மீறி மாணவர்களால் ஒன்றும் செய்ய முடியாது என்று அவர்கள் மிக எளிதாக மாணவர்களை பழிவாங்கினார்கள்.

            அதாவது  5 பேர் கொண்ட குழுவாக எல்லா மாணவர்களையும் பிரித்து செய்முறைத் தேர்விற்கு ஏற்பாடு செய்தார்கள். அதில் இரண்டு குழுவில் உள்ள 2 மாணவர்கள் மட்டும் பழிவாங்கப்பட்டார்கள். மற்ற 3 மாணவர்களுக்கு அதிக மதிப்பெண் வழங்கியும் ஆசிரியர்களுக்குப் பிடிக்காத அந்த 2 மாணவர்களுக்கு மிகவும் குறைந்த மதிப்பெண் வழங்கியும் தேர்வு முடிவை வெளியிட்டார்கள். 5 பெரும் ஒரே செய்முறைத் தேர்வை தான் செய்தார்கள். ஆனால் 2 பேருக்கு மட்டும் மிக குறைந்த மதிப்பெண் எப்படி வழங்க முடியும். 5  பேரிடமும் வேறுபாடு இருக்கலாம் ஆனால் பெரிய வேறுபாடு இருக்கக் கூடாது. செய்முறைத் தேர்வின் விதிப்படி செயல் முறைக்கு ஒரு அளவுகோலின்படி மதிப்பெண், கேள்வி நேரத்தில் ஒரு அளவுகோலின்படியும், செய்முறை நோட்டுப் புத்தகத்தை சமர்பிப்பதற்கு  ஒரு அளவுகோலின்படியும் மதிப்பெண் வழங்கப்படும். அப்படியானால் இங்கே பழிவாங்க வேண்டிய மாணவர்களுக்கு கேள்வி நேரத்திலும்,  செய்முறை நோட்டுப் புத்தகத்தை சமர்பிப்பதிலும் வேண்டுமானால் மதிப்பெண்ணை குறைக்கலாம். ஏன் என்றால்  அது தனிப்பட்ட மாணவர்களின் செயல்பாடு. ஆனால் செயல் முறையில் இப்படி வித்தியாசம் காட்ட முடியாது அதை அனைவரும் ஒன்றாக செய்திருகிறார்கள். இந்த வழியில் ஆசிரியர்கள் ஏளனமாக இருந்து விட்டார்கள்.   மாணவர்கள் ஆசிரியரிடம் என்று விளக்கம் கேட்டார்கள். ஆசிரியர்கள் அவர்களை உதசினப்படுதினர்கள். உங்களால் ஒன்றும் செய்ய முடியாது முடிந்தால் செய்து பாருங்கள் என்று சொனார்கள். பின் பழி வாங்கப்பட்ட மாணவர்கள் கல்லூரி முதல்வரிடம் சென்று முறையிட்டார்கள், முதல்வரும் அவர்கள் உதைனப்படுதினார். 
 
            இறுதியாக மாணவர்கள் கையில் எடுத்த ஆயுதம் தகவல் அறியும் உரிமை சட்டம். செய்முறைத் தேர்வை கையாளும் முறையையும், மதிப்பெண் வழங்கும் முறையையும் வழங்குமாறு பல்கலைக்கழகத்திடம் இச்சட்டத்தின் மூலம் பெற்று கொண்டார்கள். பின் தங்களுக்கு மதிப்பெண் வழங்கிய முறையையும் பெற்றுக் கொண்டார்கள். இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்தல் ஆசிரியர்கள் பழிவாங்கப் பட்டது தெரியவந்தது. மாணவர்கள் இப்பிரச்சனையை பெறப்பட்ட  தக்க ஆதரங்களுடன்  பல்கலைக்கழக பதிவாளரிடமும்,  துணை வேந்தரிடமும்  எடுத்தச் சென்றார்கள். தவறை தெரிந்து கொண்ட ஆசிரியர்களும், கல்லூரி முதல்வரும் மாணவர்களிடம் முறையிடும் நிலைமைக்கு வந்தார்கள். துணை வேந்தரிடம் பிரச்சனையை எடுத்துச் செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்கள். நீண்ட நாள் அவர்கள் பணிவுடன் கேட்டுப்பர்தர்கள் ஆனால் மாணவர்கள் பின் வாங்கவில்லை. இறுதியாக துணைவேந்தர் தவறு செய்த ஆசிரியர்களை கண்டித்து மாணவர்களுக்கு மறு தேர்வை நடத்தினார்.  இங்கே தகவல் அறியும் உரிமை சட்டம்  மூலம் யார் தலை நிமிர்ந்து நின்றனர், யார் பயந்தனர் என்று தெரிந்திருக்கும்.

               
              தகவல் அறியும் உரிமை சட்டம் நமக்கும் அரசுக்கும் உள்ள இடைவெளியை குறைக்கும் சட்டம்.  இச்சட்டத்தை பயன்படுத்தினால் நம்மை நிர்வாகம் செய்யும் அரசின் செயல்பாடுகளைப் பற்றி தெரிந்து கொள்ள முடியும். சில தேசிய பாதுகப்பு சம்பந்தமான செயல்களைத் தவிர  அரசின் எல்லா நிர்வாகங்களையும் நாம் இச்சட்டத்தின் மூலம்  தெரிந்து கொள்ள முடியும். இதற்கு அந்த துறையை சார்ந்தவர்களாக நாம் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. யார் வேண்டுமானாலும் அரசின் எந்த நிர்வாகத்தைப் பற்றியும் தெரிந்து கொள்ள முடியும். ஏன் நாம் தகவலை கேட்கிறோம் என்று  நாம் காரணம் கூற அவசியம் இல்லை. இதில் ஒளிவு மறைவு இல்லை. இதனால் அரசு நம்மை ஏமாற்ற முடியாது. பெறப்பட்ட தகவல்களைக் கொண்டு நாம் அரசை கேள்வி கேட்கலாம். கேள்வி கேட்ட 30 நாட்களுக்குள் முறையான பதில் தரவேண்டும். 30 நாட்களுக்குள் பதில் தரவில்லையென்றால் சமந்தப்பட்ட அதிகாரிகள் அபராதம் கேட்ட வேண்டிய சூழல் உருவாகும்.   அவசரமான  செயல்களைக் குறித்து கேள்வி என்றால் 2 நாட்களுக்குள் பதில் தரவேண்டும்.  இச்சட்டத்தின் வலிமை நம் கையில் தான் இருக்கிறது.

                    நாம் இன்னும் தவறு செய்யும் அரசு அதிகாரிகளுக்கு பயப்படாமல் நமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளையவது கேக்கத் துணிவோம். நாம் ஊர் பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டாம். நம் பிரச்சனைகளையவது தட்டிக் கேட்கத் துணிவோம். அதற்கு வலிமையான ஆயுதமான தகவல் அறியும் உரிமை சட்டத்தைக் கையில் எடுப்போம்.        
              

          

Thursday 1 September 2011

அரசியல் விளையாட்டு




                          ஆட்சி மாறும்போது எல்லாம் அரசியல்வாதிகளின் விளையாட்டையும் பார்க்கலாம். இப்போது, விளையாட்டில்  முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்டம் மேலோங்கி இருக்கிறது. ஆம், முந்தைய ஆட்சியில் செல்வி. ஜெயலலிதா ஆட்சியை பிடிக்கும்போது தி.மு.க. தலைவர்  திரு. கருணாநிதியை சிறையில் அடைத்தார். கட்சிக்காரர்கள் எல்லாம் வெளியே இருந்து வேடிக்கை பார்த்தார்கள் என்னமொவேல்லாம் செய்தார்கள். இப்பொது திரு. கருணாநிதி அவர்களை மட்டும் வெளியே வைத்து விட்டு, கட்சிகாரர்களை எல்லாம்   சிறையில் அடைத்து வைக்கிறார் முதல்வர் செல்வி. ஜெயலலிதா. தி.மு.க. தலைவர் என்ன  செய்வது தெரியாமல் திணறுகிறாரா? . விளையாட்டு நன்றாக போகின்றது.
          



Sunday 7 August 2011

பெண்ணியம்...! பெண் அடிமை வாழ்க..!



                 பெண்கள் அடிமை படுத்தப்படுகிறார்கள், பெண்களுக்கு திருமணதிற்கு முன்னும் பின்னும்  சம உரிமை இல்லை, பெண்கள் சினிமாவிலும், விளம்பரத்திலும் கவர்சிக்காகவே படுத்தப்படுகிறார்கள்  என்று நிறைய பெண்களும் குறிப்பாக சில ஆண்களும், ஆண் சமுகத்தை எளிதாக பழிக்கிறார்கள், பெண் சம உரிமைக்காக போராடுகிறோம் என்றும்   சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். அப்படி என்னதான் போராடுகிறார்கள் இவர்கள்?


               கல்யாணத்திற்கு பெண்  வீட்டில்  இருந்து மாப்பிளை பார்க்கும் போது எப்படி பார்க்கிறார்கள்?    நல்ல மாப்பிளையா, நல்லா உடல் அமைப்பா?  நல்லா படித்து இருகிறான? என்று பார்த்தல் சரி.. ஆனா, அவங்க எப்படி தேடுறாங்க, மாப்பிளை பெண்ணை விட உடல் ரீதியில் பெரியவனா? பெண்ணை விட உயரம் அதிகமா, நிறைய சம்பளத்திற்கு வேலை செய்கிறானா ஆனால் பெண் வேலை பார்க்காமலும் இருப்பாள், அப்படியே பெண் வேலை செய்தாலும் அவளை விட அதிகம் சம்பளம் வாங்குகிற ஆண் மகனைத் தேடுகிறார்கள். இப்படி உடல் ரீதியிலும், பணத்திலும் பெண்ணை விட ஆண் உயர்ந்திருக்க வேண்டும் ஆனால் மிக கண்டிப்பாக பெண்ணுக்கு சம உரிமை வேண்டும். எப்படி இது முடியும், ஆண் மகன் எல்லா வழிகளிலும் பெண்ணை விட உயர்ந்திருக்கும் போது இது எப்படி நடக்கும். 

           படிக்கிற பொண்ணுங்ககிட்ட கேட்டு பாருங்க, உங்களுக்கு வர போற கணவன் எப்படி இருக்கணும்னு? அவங்க என்ன சொல்லுவாங்க, என்னோட அதிகமா படிச்சிருக்கணும் இல்லைனாலும் என்னோட அளவுக்காவது படிச்சிருக்கணும், நான் 10000 ரூபாய் சம்பளம் வாங்கினா மாப்ளை 10000 க்கு மேல வாங்கணும், என்னை விட உயரமாக இருக்க வேண்டும், குறைந்தது என்னோட உயரமாவது இருக்கனும், ஏன் என்று கேட்டால், ஆண் மகன் பெண்ணை விட உடல் ரீதியில் சக்தி வாய்ந்தவர்கள். இது தான் இயற்கை என்கிறார்கள். இயற்கையை ஒத்துக்கொள்கிறார்கள் ஆனால் பெண் என்பவள் ஆணுக்கு சமமானவர்கள் என்று பேசுகிறார்கள்.

               இந்த மாதிரி பெண்களும், பெண் வீட்டாரும் இருந்தால் ஆணதிக்கம் ஒழியாது. யார் எப்படி மேடை போட்டு பேசினாலும், எத்தனை சட்டங்கள் வந்தாலும் இது இப்படி தான் இருக்கும்...  இனிமேலாது படிக்கிற பெண்கள் தன்னை விட குறைவாக படித்த ஆணையோ அல்லது  படிக்காத ஆணையோ கல்யாணம் பண்ண வேண்டும். தன்னை விட குறைவான சம்பளம் வாங்கும் ஆணையோ அல்லது வேலை இல்லாத ஆணையோ திருமணம் செய்ய முன் வாருங்கள். உடல் ரீதியில் சுமாராக உள்ள ஆணை திருமணம் செய்யுங்கள். வேலைக்குப் போகும் பெண்கள் வேலை இல்லா ஆண்களை திருமணம் செய்து கொண்டால், வரதட்சனைக் கொடுமை பெண்களுக்கு வருமா?  இந்த விஷயத்தில் ஆண்கள் எவ்வளவு கெட்டிக்காரர்களாக இருக்கிறார்கள் பாருங்கள். உயரத்திலோ, சம்பளம் வாங்குவதிலோ அல்லது வேளைக்கு போகாத பெண்ணையோ இப்படி  தன்னை விட குறைவாக இருந்தால் போதும் என்று நினைக்கிறார்கள்.  பெரியதாக  ஆசை பட்டு ஆண் உரிமைக்காக யாரும் போராடவில்லை.

               இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் எந்த பெண்ணோ அல்லது பெண் வீட்டாரோ வேளைக்கு போகாத ஆண் மகனையாவது  திருமணம் செய்ய முன் வருகிறார்களா? அல்லது செய்து வைக்க உடன் படுகிறார்களா?  ஆண்கள் வேளைக்கு போனால்தான் பெண் கொடுக்கிறார்கள். ஆனால் பெண்களுக்கு அப்படி இல்லை. அப்படியானால் பெண்களுக்கு  எதுக்கு 50 % இட ஒதுக்கீடு வேலை வாய்ப்பிலும் மற்றும்  எல்லா துறைகளிலும்  வேண்டும்.  சும்மா எதாவது பேச வேண்டுமென்று பேசுவது வாடிக்கையாகிவிட்டது.

             பெண்கள் சினிமாவில் வெறும் கவர்சிக்க்காகவே பயன்படுதப்படுகிரர்கள் என்று நிறைய மக்கள் சொல்லுகிறார்கள். ஆனால் அது அப்படி மட்டும் இல்லை. பெண்கள் கவர்சிக்க்காகவும்  பயன்படுதப்படுகிரர்கள். சினிமாவில் பெண்களை  அரை குறை ஆடையோடு நடிக்க வைக்கிறார்கள் என்கிறாகள். அப்படி மட்டும் இல்லை. பெண்களை வித விதமான ஆடைகளால்  ஆண்கள் அழகுபடுதுகிரர்கள். பெண்கள் உடலை முழுவதும் மறைத்து ஆடை அணியும் போது உள்ள அழகையும், மிக குறைவான ஆடை அணியும் போது கவர்சிகரமான அழகையும் சொல்லியிருகிறார்கள். சேலையை பற்றி பெருமையாக பேசியதும் சினிமாவில் தான். யோசித்துப் பார்த்தால் தெரியும் ஆண்களை விட பெண்களுக்கு தான் நிறைய வகைகளில் ஆடைகள் உண்டு. பெண்ணை எப்படி எல்லாம் கவர்ச்சியாக பார்க்க முடியுமோ அப்படி எல்லாம் ரசிக்கிறார்கள். வெறும் கவர்ச்சியாக மட்டுமா பார்கிறார்கள், பெண்களை தேவதைகளாக பார்க்கிறார்கள், பிசாசுகளாக பார்க்கிறார்கள், ஒரு பெண்ணால் ஆண் முன்னேறவும் முடியும், நாசமாகவும் போக முடியும் என்று உணர்கிறார்கள். அம்மாவை போற்றத சினிமா உண்டா? அம்மாவை எப்படி எப்படி எல்லாம் போற்ற முடியுமோ அப்படி எல்லாம் போற்றி இருக்கிறார்கள். எத்தனை சினிமாவில் அப்பாவை பற்றி  போற்றி இருக்கிறார்கள்? குடிகார அப்பா, வைப்பட்ட்டி வைத்திருக்கும் அப்பா என்று நிறைய சினிமாவில் சொன்னதுண்டு. அக்கா, தங்கை, தோழி உறவு முறை பற்றி நிறைய சினிமாவில் போற்றி இருக்கிறார்கள்.  அது போலத்தான் விபச்சாரியாகவும் பெண்ணை சினிமாவில் காட்டுகிறார்கள். இப்படி எல்லா வழிகளிலும் பெண்ணை ரசிப்பவன், உணருகிறவன் ஆண் மகன். இவை எல்லாவற்றிலும் பாலியல் சிறிது மேலோங்கியிருகிறதே தவிர பெண்ணை கவர்சிக்காக மட்டும் பயன்படுத்தவில்லை. ஹிந்தி சினிமாவில் கதா நாயகர்கள் தன் உடம்பை காட்டாத சினிமாக்கள் மிகவும் குறைவு. மேலும் பெரும்பாலான  ஆங்கில திரைப்படங்களில் கதா நாயகனின் உடல் பெரும்பாலும் பலத்தையும், கவர்ச்சியையும் காட்டுவதாய் இருக்கும். இதை ஆண்கள் பெருமையாக நினைக்கிறார்கள்.

                         ஒரு ஆண்  இயக்குனர் ஆணை மையமாக வைத்து சினிமா  எடுக்கிறான். அவன் அதைத்தான் முழுமையாக செய்ய முடியும். ஒரு ஆண் பெண்ணின் உணர்வுகளை முழுமையாக சொல்ல முடியாது. அதனால் பெண்ணின் முழு உணர்வுகளும் சரி வர காட்டப்படுவதில்லை.  இதை சரி செய்ய பெண்களும்  சினிமாவை இயக்க வேண்டும். பெண்ணின் உணர்வுகள், பெண்ணால் முடிந்தவை, முடியாதவை, நீங்கள் ஆணை அணுகும் முறை, ஆண்களை ரசிக்கும் விதம் மற்றும்  வெறுக்கும் முறை  எல்லாவற்றையும் சினிமா மூலமாக சொல்ல வேண்டும். இதை தவிர பெண்களும், சில ஆண்களும் எப்படி எல்லாம் போராட்டம் நடத்தினாலும் அது பயனற்றவையாகவே தொடரும்.

                      
                        விளம்பரத்தில் பெண்கள் ஆபாசமாக கட்டப்படுகிறார்கள்  என்றும்  பலர் குறை கூறுகிறார்கள்.  இது  விளம்பர யுக்திகளில் இதுவும் ஒன்று. தயாரிக்கப்படும் பொருட்கள் யாரை நினைத்து தயாரிக்கப்படுகிறதோ அதற்கேற்றவாறு தான் விளம்பரமும் பண்ண முடியும். வேண்டுமென்றால் அதை தவிர்த்து பெண்கள் வியாபாரம் செய்து தாருங்கள் அதை நாங்கள் பின்பற்றுகிறோம். 


                  ஆண்கள் செய்வது எல்லாவற்றையும் பெண்கள் செய்ய முடியும் என்று சொல்லாதிர்கள். பெண்களுக்கும் ஆண்களுக்கும் சில தனித்தன்மை உண்டுன்பதை ஏற்றுக்கொள்ளுங்கள். கடைசியாக ஒரு வேண்டுகோள் பெண்கள் தங்களுடய உணர்வுகளை வெறும் வார்த்தைகளால் மட்டும் சொல்லாமல் செய்து காட்டுங்கள். நீங்கள் காலடித்தடத்தை வைத்துவிட்டு செல்லுங்கள் ஆண்கள் அதை பின்பற்ற முயற்சிப்பார்கள். 

           ஒழியட்டும் பெண்ணடிமை... ஒழியட்டும் ஆணைப்பற்றிய  வேண்டாத பிரச்சாரங்கள்...   வளரட்டும் பெண்ணியம்..   வாழ்க பெண்ணியம்...! 

                                   
 




இந்தியாவில் இல்லையா மருத்துவம்?

                  


                          திருமதி. சோனியாகாந்தி அவர்கள் புற்று நோய் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்று உள்ளார் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஏன் நம் நாட்டில் புற்று நோய் சிகிச்சைக்கு மருத்துவம் சரியில்லையா?  ஏன் வெளி நாடு செல்ல வேண்டும்? நம் நாட்டில் புற்று நோய்க்கான மருத்துவம் சரி இல்லை என்றால் அதை மேம்படுத்த வேண்டியதுதானே.. நம் நாட்டில் உள்ள பெரிய பணக்காரர்கள், தொழில் அதிபர்கள் வெளி நாட்டிற்கு மருத்துவம் பார்க்க செல்லலாம். இங்கு மருத்துவ வசதி சரி இல்லை என்று கூறலாம். அவர்களால் இங்கு உள்ள மருத்துவத்தை மேம்படுத்துவது கடினம். ஆனால், நாட்டை ஆளும் திருமதி. சோனியாகாந்தி  அவர்களால் மருத்துவத்தை மேம்படுத்த முடியாதா? அப்படியானால், நாட்டிற்கு  எதற்கு  சுகாதரத் துறை அமைச்சர், இணை அமைச்சர், 28 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன் பிரதேசங்களில் சுகாதரத் துறை அமைச்சர்கள்? 120 கோடி மக்கள் இவரை நம்பி நாட்டை கொடுத்தால், இவர் இங்கு  மருத்துவத்தை மேம்படுத்தாமல் இருக்கிறார்...

                     இங்கே அவருக்கு மருத்துவம் செய்வதற்கு போதுமான வசதிகள் இருகின்றன அனால், அவர் அமெரிக்காவை சுற்றி பார்த்துவிட்டு அங்குள்ள சுற்றுச்சூழலில் மருத்துவம் மேற்கொண்டு அங்கே சிறிது காலம் ஓய்வு எடுப்பதாக கூறினால்... அதை ஏற்றுகொள்ள யோசிக்கலாம்.  ஒரு வகையில் ஏற்றுக்கொள்ளலாம்.. இருந்தாலும் பெரும்பான்மையான மக்கள் தலைவரையே பின்பற்ற நினைப்பதால் இவர்  இந்தியாவில் மருத்துவம் பார்ப்பது நல்லது. இது அம்மக்களுக்கு முன்னோடியாகவும்  இருக்கும். நம் நாட்டைப்பற்றிய நன் மதிப்பையும் காட்டும்.   

Monday 25 July 2011

அ.. ஆஹ..


இன்னா செய்தாரை ஒருத்தல் அவர்நாண 
நன்னயம் செய்து விடல்.
இதுக்கு என அர்த்தம்னு, பாடத்துல படிச்சதவச்சி யோசிச்சா கொஞ்சம் வேற மாதிரி இருக்கு. நம்மை கஷ்டபடுத்திவர்களை, நமக்கு கெடுதல் செய்தவர்களை நாமும் கஷ்ட படுத்தக் கூடாது. அதுக்கு பதிலா  அவங்க வெட்கப்பட்டு போகுறமாதிரி அவங்களுக்கு நல்லது செய்யனுமாம்.


அப்படினா, அவன், என்னை கஷ்டபடுதிட்டானு, நானும் நல்லது செய்ஞ்சி அவன கஷ்டபடுத்தனுமா, என்னது இது, ரெண்டு பேரும் ஒருத்தர ஒருத்தர் கஷ்டபடுத்துறோம் ஆனா வழி தான் வேற வேற..


சும்மா தான் சொன்னேன். தப்பா எதையும் நான் சொல்ல வரவில்லை.